![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgL-n2bWtq-W4ffiHar6y8ZmOEIVKpuoqN6UCOLsZ58FYtZQxtffxkQajZKa94yMYrSppx8tpyWR830A2j95DMwgztWs9cy2aeNOdADPsOw_CyL54isKgdbBbW03qAAiv133N_uYfTh-UA/s1600/MTE5NTU2MzE1OTQ0NzQ4NTU1.jpg)
தன் மகன் உடல் நலமின்றி இருந்தபோது, அரசு வக்கீல் வேலையை விட தீர்மானித்திருந்ததாக தெரிவித்துள்ள பிடன், வருமானமற்ற நிலை ஏற்படும் பட்சத்தில், மகன் குடும்பத்துக்கு உதவி செய்வதற்காக, தானும், தன் மனைவியும், வீட்டை விற்க முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதை அதிபர் ஒபாமாவிடம் தெரிவித்தபோது, ‘வீட்டை விற்க வேண்டாம்; தேவையான பணத்தை நான் தருகிறேன்’ என்று அவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இதில், ஒபாமா, பணம் தருவதாக கூறியது, செய்தியே அல்ல.
உலகை கட்டியாளும் வல்லரசு நாட்டின் துணை அதிபர், மகன் குடும்பத்தைக் காப்பாற்ற பணமின்றி வீட்டை விற்க முன்வந்தார் என்பதுதான் செய்தி. நகராட்சி, மாநகராட்சி கவுன்சிலர்கள் எல்லாம், கோடி கோடியாக சம்பாதித்து, பலப்பல தலைமுறைகளை செட்டில் செய்வதை பார்க்கும் நாம், வல்லரசின் துணை அதிபர், மகன் குடும்பச்செலவுக்காக வீட்டை விற்க முன் வந்த தகவலையும் பார்க்கிறோம். நாம் எங்கே, அவர்கள் எங்கே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக